Tamilnadu
ECR விவகாரம் : 6 இளைஞர்கள் கைது - 2 கார்கள் பறிமுதல்!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!