Tamilnadu
ECR விவகாரம் : 6 இளைஞர்கள் கைது - 2 கார்கள் பறிமுதல்!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம்!” : முதலமைச்சரின் 2 அதிரடி அறிவிப்புகள்!
-
மதுரை அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசு!
-
“ரொக்கமாக…நேரடியாக…ஒரு நொடியும் தாமதமின்றி!” : பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்!
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் AI கேமராக்கள்! : பெங்களூருவில் மீண்டும் IPL போட்டிகள் நடைபெறுமா?