Tamilnadu
தொழிலாளர் நலத் துறையில் பதிவு செய்யப்பட்டது 'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கம் : சிஐடியு வரவேற்பு !
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஊதிய உயர்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்கு வந்த நிலையில், பேச்சுவார்தைக்காக அமைச்சர்களை நியமித்து இந்த விவகாரத்தில் சுமுகமான முறையில் தீர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள், நிர்வாகத்தினர் என அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமுக முடிவு எட்டப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவர் என்று அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையும் ஒருபகுதியாக சாம்சங் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க சாம்சங் நிறுவனம் அனுமதி அளித்தது. அதன்படி 'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.
இந்த நிலையில், 'சாம்சங் இந்தியா' தொழிற்சங்கத்தை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது சாம்சங் தொழிற்சங்கத்திற்கு கிடைத்த மிகப் வரலாறு வெற்றி என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "சட்டத்தின் உரிமைகளை தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலமாக சாதிக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது. சாம்சங் தொழிற்சங்கம் மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
-
முதலீடுகள் விவகாரம் : திமுக மீது பொய் பழி.. அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆந்திர அமைச்சர் கொடுத்த பதிலடி என்ன?