Tamilnadu
15 சிறுமிக்கு பாலியல் தொல்லை : பா.ஜ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!
பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராக இருப்பவர் ஷா. இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், 15 வயது சிறுமியின் செல்போனுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. மதுரை தெற்கு வாசல் குற்றப்பிரிவு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கேள்வி எழுப்பும் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், 15 வயது சிறுமிக்கு பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!