Tamilnadu
15 சிறுமிக்கு பாலியல் தொல்லை : பா.ஜ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!
பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராக இருப்பவர் ஷா. இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், 15 வயது சிறுமியின் செல்போனுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. மதுரை தெற்கு வாசல் குற்றப்பிரிவு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கேள்வி எழுப்பும் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், 15 வயது சிறுமிக்கு பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!