Tamilnadu

பொங்கல் சிறப்பு ரயில்கள் : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் !

பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தாம்பரம் -திருநெல்வேலி , தாம்பரம் -கன்னியாகுமரி , சென்னை சென்ட்ரல் -கன்னியாகுமரி , தாம்பரம் -திருச்சி , எழும்பூர் -ராமேஸ்வரம் , மைசூர் -தூத்துக்குடி , பெங்களூரு -சென்ட்ரல் என 7 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எழும்பூர் -திருநெல்வேலி , தாம்பரம் -நாகர்கோவில் , சென்ட்ரல் -மதுரை , எழும்பூர் -மதுரை என 4 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது .இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தது. இதனால் முன்பதிவு செய்யவந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: பெரியாரை விமர்சிக்கும் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்தி - திருமாவளவன் விமர்சனம் !