Tamilnadu
பொங்கல் சிறப்பு ரயில்கள் : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் !
பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தாம்பரம் -திருநெல்வேலி , தாம்பரம் -கன்னியாகுமரி , சென்னை சென்ட்ரல் -கன்னியாகுமரி , தாம்பரம் -திருச்சி , எழும்பூர் -ராமேஸ்வரம் , மைசூர் -தூத்துக்குடி , பெங்களூரு -சென்ட்ரல் என 7 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எழும்பூர் -திருநெல்வேலி , தாம்பரம் -நாகர்கோவில் , சென்ட்ரல் -மதுரை , எழும்பூர் -மதுரை என 4 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது .இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தது. இதனால் முன்பதிவு செய்யவந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கொ.ம.தே.க-விற்கு 2 சீட் ஒதுக்கீடு: கொங்கு மண்டலத்தில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும் - ஈஸ்வரன் பேட்டி!
-
தூத்துக்குடியில் ரூ.13,000 கோடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!