Tamilnadu
”இந்தியாவை தாங்கி பிடிக்கும் மாநிலம் தமிழ்நாடு” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 14-வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் - திறனாளர்கள் மாநாட்டினை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு விடுதலை பிறந்து உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அயலகத் தமிழர் நலவாரியத்தை அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டை நாம் வளர்த்து எடுத்து வருகிறோம். இந்தியாவை தாங்கி பிடிக்க கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழுந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது பல்லாயிரம் தொழிற்சாலைகள் இங்கு செயல்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசே, தொழில் துறையில் நம்பர் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என பாராட்டியுள்ளது. 35% ஆட்டோ மொபைல், 35% எலக்ட்ரானிக், 40% மின்சார வாகனம், 70% இருசக்கர வாகனம் உற்பத்தி தமிழ்நாட்டில் நடக்கிறது. 100 ஆண்டுகளாக படி படி என்று சொன்னதால் தான் தமிழ்நாடு இந்த நிலைமைக்கு வந்து உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!