Tamilnadu
தமிழ்நாடு கல்வித்துறையில் மாபெரும் சாதனை : ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல் !
இந்தியா முழுவதும், 2019 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை-உயர்நிலை பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் குழந்தைகளின் சாதனைகள்
தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப்பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019ல் 99 பேர் என்பது 2024ல் 100 பேர் என உயர்ந்துள்ளது. அதேபோல, சிறுமியர் எண்ணிக்கை, 97.5ல் இருந்து 100 ஆக 2024-ல் அதிகரித்து இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது புலனாகியுள்ளது.
அதேபோல, தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019-ல் 81.3 என இருந்தது 2024-ல் 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 89.4 சதவிகிதமாக இருந்தது 2024-ல் 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்
அதேநேரத்தில், பீகார் மாநிலத்தில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 78.6 சதவிகிதமாக இருந்தது 2024-ல் 65 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 81.1 சதவிகிதமாக இருந்தது 2024-ல் 65.4 சதவிகிதமாக குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.
பீகாரில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை 51.2 சதவிகிதம் என்பது 38.8 சதவிகிதம் என 12.4 சதவிகிதம் குறைந்து இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல மாணவிகளைப் பொறுத்தவரையிலும், மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் 2019-ல் 51.6 சதவிகிதமாக இருந்தது 2024-ல் 9.3 சதவிகிதம் குறைந்து அதாவது 42.3ஆக குறைந்து பள்ளிப் படிப்பை இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்
அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 93.4 சதவிகிதமாக இருந்தது 2024-ல் 82.6 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 96.7 சதவிகிதமாக இருந்தது 2024-ல் 88.7 சதவிகிதமாகக் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.
மேல்நிலைப்பள்ளிப் படிப்பைப் பொறுத்தவரை 2019-ல் மாணவர்கள் எண்ணிக்கை 62.6 என்பது 2024-ல் 57.4 சதவிகிதமாகவும்; மாணவிகள் எண்ணிக்கை 64.6 சதவிகிதம் என்பது 63.7 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது.
அரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்
அரியானா மாநிலத்தை பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 98.3 சதவிகிதம் என்பது 2024-ல் 93 சதவிகிதமாகவும்; மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 97.7 சதவிகிதம் என்பது 2024-ல் 95.6 சதவிகிதமாகவும் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-ல் மாணவர்கள் எண்ணிக்கை 82.6 என்பது 2024-ல் 77.3 சதவிகிதமாக குறைந்துவிட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்
ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 91.2 சதவிகிதம் என்பது 2024-ல் 84.8 சதவிகிதமாகவும்; மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 90.8 சதவிகிதம் என்பது 2024-ல் 86.6 சதவிகிதமாகவும் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல, மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-ல் மாணவர்கள் எண்ணிக்கை 78.6 என்பது 2024-ல் 72.6 சதவிகிதமாகவும்; மாணவிகள் எண்ணிக்கை 78 சதவிகிதம் என்பது 76.9 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது.
பீகார், அசாம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பள்ளிப் படிப்பை இடையில் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தும் திட்டம், முதலிய திட்டங்களால்தான் குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் படிப்பதில் ஊக்கமும் உற்சாகமும் அடைகிறார்கள் என்பது ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக (UDISE+) ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
ரூ.11 கோடி செலவில் வணிக வளாகம் : திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
-
திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்தி திணிப்பு முயற்சி : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!
-
”எடப்பாடி பழனிசாமி Oru Soft Sangi” : கனிமொழி என்விஎன் சோமு MP கடும் தாக்கு!