Tamilnadu
சென்னையில் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி! : நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4 ஆவது மலர்க் கண்காட்சி நாளை (ஜனவரி 2) தொடங்க உள்ளது.
இந்த மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாளை தொடங்கும் இந்த மலர்க் கண்காட்சி வரும் 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதனால், சென்னை செம்மொழி பூங்காவில் பூக்களை அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50 வகையான 30 லட்சம் பூச்செடிகளை கொண்ட மலர் தொட்டிகள் எடுத்து வரப்பட்டு அதனை ஓவ்வொரு இடத்திலும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த மலர் கண்காட்சியில் பூக்களால் செய்யப்பட்ட முதலை, யானை, பட்டாம் பூச்சி, தொடர்வண்டி, அன்னபறவை, மிக்கி மவுஸ், படகு, கார் உள்ளிட்டவைகள் இடம்பெறுகிறது.
இந்நிலையில், மலைப் பகுதிகள் காணக்கூடிய மலர்க் கண்காட்சியை சென்னையில் காண, மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!