Tamilnadu
சென்னையில் ஒழுங்கற்ற முறையில் நடப்படும் கம்பங்களுக்கு முற்றுப்புள்ளி : மாநகராட்சி அதிரடி முடிவு !
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இண்டெர்நெட் நிறுவனங்களால் அமைக்கப்பட்ட கம்பங்கள் ஒழுங்கற்ற முறையில் நடப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
அதனைத் தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் கம்பங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக கம்பங்கள் அமைத்துள்ள நிறுவனங்களுக்கு அபராத தொகை வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 75,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், அனுமதி பெறாமல் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 1 லட்சம் அபாராதம் பெற்று அதனை அகற்ற உத்தரவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 50,000 ரூபாய் அபராதத் தொகையை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இண்டெர்நெட் நிறுவனங்களாக (JIO AIRTEL & ACT) நிறுவங்கள் மூலம் புதிதாக கம்பங்கள் அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!