Tamilnadu
சென்னையில் ஒழுங்கற்ற முறையில் நடப்படும் கம்பங்களுக்கு முற்றுப்புள்ளி : மாநகராட்சி அதிரடி முடிவு !
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இண்டெர்நெட் நிறுவனங்களால் அமைக்கப்பட்ட கம்பங்கள் ஒழுங்கற்ற முறையில் நடப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
அதனைத் தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் கம்பங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக கம்பங்கள் அமைத்துள்ள நிறுவனங்களுக்கு அபராத தொகை வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 75,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், அனுமதி பெறாமல் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 1 லட்சம் அபாராதம் பெற்று அதனை அகற்ற உத்தரவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 50,000 ரூபாய் அபராதத் தொகையை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இண்டெர்நெட் நிறுவனங்களாக (JIO AIRTEL & ACT) நிறுவங்கள் மூலம் புதிதாக கம்பங்கள் அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!