Tamilnadu
கன்னியாகுமரியில் 133அடி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா! : செங்கல்பட்டு பொதுநூலகத்தில் சிறப்பு கண்காட்சி!
கன்னியாகுமரியில் 2000ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, உலக பொதுமறையை எழுதிய திருவள்ளுவருக்கு 133அடி உயர சிலை திறக்கப்பட்டது.
அச்சிலை நிறுவப்பட்டு 25ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையடுத்து, அதற்கான 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட நூலகத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று முதல் 31.12.2024 வரை நடைபெற இருக்கிறது.
இவ்விழாவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் திருவள்ளுவர் குறித்த 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட நூலக அலுவலர்கள், நூல் படிப்போர் வட்டத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!