Tamilnadu
ரயில் பயணிகள் கவனத்திற்கு... ரயில்களின் நேரம் மற்றும் ரயில் நிலையம் மாற்றம்!
சென்னை அருகே ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருற்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையமும் மாற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
1.சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும்.
2.சென்னை - ஏற்காடு விரைவு ரயில் கடற்கரையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும்.
3.சென்னை - கொல்லம் சிறப்பு விரைவு ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும்.
4.சென்னை - மும்மை லோக்மான்ய சிலக் விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும்.
5.சென்னை - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மாலை 4 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும்.
Also Read
-
“பழனிசாமி, RSS சாமிகள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!