Tamilnadu
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் 9ஆம் நாள் 9.30மணிக்கு தொடங்கவுள்ளது. அலுவல் ஆய்வு கூட்டத்தில் எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பதை கூடி முடி செய்த பிறகு தெரிவிக்கப்படும்” என்றார்.
அதன் பிறகு, சட்டப்பேரவை நிகழ்வு நேரலை மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு பின்பு தான் நேரலை செய்யும் முறை வந்துள்ளது. முழுமையாக நேரலை செய்வது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிநாடுசுற்றுப்பயணத்தின் போது AI தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு AI தொழில் நுட்பத்தில் முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களுக்கு இது பயனளிக்கக்கூடியதாய் அமைந்து வருவது போல், சட்டபரேவையிலும் காதிகமில்லாத முறை உள்ளது” என்றார்.
செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் இருந்தார்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!