Tamilnadu
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர், “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், 69 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து தி.மு.க. எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!