Tamilnadu
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர், “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், 69 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து தி.மு.க. எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!