Tamilnadu
”யார் நினைத்தாலும் டெல்டா பகுதியில் இது நடக்கவே நடக்காது” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொல்வது என்ன?
திருவாரூர் மாவட்டம் எடையூர் சங்கேந்தி பகுதியில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பங்கேற்றார்.
இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,”திராவிட மாடல் ஆட்சியில் தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் முன்னெடுப்பில் தான் ஒட்டுமொத்த டெல்டா பகுதியே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
எந்த காலத்திலும், யார் நினைத்தாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இங்கு கொண்டுவர முடியாது. இது தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டி அதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரக்கூடிய வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வரலாற்றிலேயே முதல்முறையாக ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலை அமைத்து அதில் 15000 மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் நாயகர் ஆட்சியில் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் விவசாய விலைப் பொருளுக்கு மதிப்பு கூட்டும் வேலை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மக்கள் பயன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மிக விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்...” - எங்கெங்கே? - அமைச்சர் மா.சு. தெரிவித்தது என்ன?
-
“காலிஸ்தானாக மாறப்போகும் டெல்லி..” - தலைநகருக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பான நாடாளுமன்றம்!
-
லேண்ட் ரோவர் ஓட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! : இராணிப்பேட்டையில் டாடாவின் நவீன வாகன உற்பத்தி ஆலை திறப்பு!
-
“டாடா-வின் ‘முதல் சாய்ஸ்’ எப்போதும் தமிழ்நாடுதான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் : தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டங்கள்!