Tamilnadu
கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தீவிரம்! : பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து நடவடிக்கை!
தெலுங்கு மொழி பேசக்கூடிய மக்கள் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த முன்னாள் நடிகை கஸ்தூரி மீது பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சமன் வழங்குவதற்காக காவல்துறை திட்டமிட்டிருந்தனர்.
அவ்வகையில், கோபாலபுரம் போயஸ் கார்டனின் அமைந்துள்ள கஸ்தூரியின் இல்லத்திற்கு சென்று பார்த்த பொழுது, அவர் தனது செல்போனை அனைத்துவிட்டு தலைமறைவாகி விட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக நடிகை கஸ்தூரியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரியின் சார்பில் பிணை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று (நவம்பர் 14) மதுரை கிளை நீதிமன்றம் கஸ்தூரி தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.
உத்தரவினை தொடர்ந்து தற்பொழுது கஸ்தூரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சென்னை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அவரது செல்போன் சிக்னலை வைத்தும் அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசிய நபர்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ள காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!