Tamilnadu
தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா! : சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகம் அனுமதி!
தர்மபுரி தாலுகா அதகப்பாடி, நல்லம்பள்ளி தாலுகா தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.
இதற்காக நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு மொத்தபரப்பு 1,724.566 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தர்மபுரி சிப்காட் தொழில் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.14.08 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளது.
462 கோடி ரூபாய் செலவில் அமைக்கபப்பட உள்ள இந்த சிப்காட் மூலம் 18,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிப்காட்டில் உள்ள 100 சதவீத நிலத்தில் இரும்பு மற்றும் இரும்பு அல்லாத தொழில்கள் மற்றும் பெட்ரோல் கெமிக்கல் மற்றும் அது சார்ந்த தொழில்கள் வகையின் கீழ் மின்சார வாகனம் மற்றும் அதற்கான பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுக்கு 27.49 சதவீத நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!