Tamilnadu
கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி! : துணைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு!
ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (நவம்பர் 10) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தலைமையில் பெருந்திரளணி தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளனி பொறுப்பாளர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோரும் உயர் காவல் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.
Also Read
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!