Tamilnadu
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, குரூப்-4ல் தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல்! : TNPSC வெளியிட்டது!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் நான்கு தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சர், அமைச்சுப் பணிகள் உள்ளிட்ட காலியாகவுள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 9ஆம் நாள் தோ்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மூன்று மாதங்களில் (அக்டோபர் 28) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதனை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?