Tamilnadu
”திமுக கொடி பறக்கும் வரை தமிழ்மொழியை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தஞ்சை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று தஞ்சை மத்திய மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டியூரில் தி.மு.கழகத்தின் கருப்பு - சிவப்புக் கொடியை ஏற்றிவைத்தார்.
மேலும் தஞ்சாவூர் மத்திய மாவட்டம், திருவையாறு தெற்கு ஒன்றியம், கோனேரிராஜபுரம் - கருப்பூரில் கழகத்தின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்து, பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. கொடி பறக்கும் வரை தமிழ்நாட்டை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நம் கழகக் கொடி பறக்கும் வரை, கழக உடன்பிறப்புகள் இருக்கும் வரை தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும், எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“புயல் சேதம் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை கைவிடவேண்டும்! : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
-
எரிசக்தி திறனிலும் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு!: ஒன்றிய அரசு வெளியிட்ட SEEI குறியீட்டில் தெரிவிப்பது என்ன?
-
“பிரதமர் மோடியின் ‘கபட நாடகம்’ அடங்கிய உரை!” : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி கண்டனம்!
-
“இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!