Tamilnadu
”திமுக கொடி பறக்கும் வரை தமிழ்மொழியை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தஞ்சை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று தஞ்சை மத்திய மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டியூரில் தி.மு.கழகத்தின் கருப்பு - சிவப்புக் கொடியை ஏற்றிவைத்தார்.
மேலும் தஞ்சாவூர் மத்திய மாவட்டம், திருவையாறு தெற்கு ஒன்றியம், கோனேரிராஜபுரம் - கருப்பூரில் கழகத்தின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்து, பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. கொடி பறக்கும் வரை தமிழ்நாட்டை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நம் கழகக் கொடி பறக்கும் வரை, கழக உடன்பிறப்புகள் இருக்கும் வரை தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும், எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கேடு கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!