Tamilnadu
”திமுக கொடி பறக்கும் வரை தமிழ்மொழியை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தஞ்சை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று தஞ்சை மத்திய மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டியூரில் தி.மு.கழகத்தின் கருப்பு - சிவப்புக் கொடியை ஏற்றிவைத்தார்.
மேலும் தஞ்சாவூர் மத்திய மாவட்டம், திருவையாறு தெற்கு ஒன்றியம், கோனேரிராஜபுரம் - கருப்பூரில் கழகத்தின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்து, பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. கொடி பறக்கும் வரை தமிழ்நாட்டை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நம் கழகக் கொடி பறக்கும் வரை, கழக உடன்பிறப்புகள் இருக்கும் வரை தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும், எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!