Tamilnadu
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
சென்னையில் பிராமணர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு சமுதாயம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என கஸ்தூரிக்கு தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்ததை அடுத்து தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பாக நடிகை கஸ்தூரி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்களை குறித்து இழிவாக பேசிவிட்டு இப்பொழுது மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் புகார் அளித்த நிலையில், 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!