Tamilnadu
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை கோவையில் தொடங்கி வைக்கவும், ரூ.158.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைக்கவும், இரண்டு நாள் பயணமாக கோவை சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கோவை மக்கள் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தந்த ஆதரவையடுத்து, தற்போது 3ஆவது முறையாக கோவை சென்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், முதலமைச்சருக்கு கோவை மக்கள் பெரும் திரளாக கூடி மாபெரும் வரவேற்பளித்தனர். இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில்,
“நல்லா இருக்கீங்களா தலைவரே…”
எனக் கோவை விமான நிலையம் முதல் ELCOT வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு!
4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது!
கோவை மக்களின் அன்பு!💗 என நெகிழவைக்கும் படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
5 ஆண்டுகளில் மாபெரும் சாதனை.. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!
-
“பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும்; அ.தி.மு.க?” : ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!
-
பாஜகவின் தொடர் அழுத்தம்.. முதலமைச்சராக பதவியேற்ற 4 மாதங்களில் ராஜினாமா.. நிதிஷின் முடிவால் பீகாரில் பரபர!