Tamilnadu
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை கோவையில் தொடங்கி வைக்கவும், ரூ.158.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைக்கவும், இரண்டு நாள் பயணமாக கோவை சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கோவை மக்கள் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தந்த ஆதரவையடுத்து, தற்போது 3ஆவது முறையாக கோவை சென்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், முதலமைச்சருக்கு கோவை மக்கள் பெரும் திரளாக கூடி மாபெரும் வரவேற்பளித்தனர். இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில்,
“நல்லா இருக்கீங்களா தலைவரே…”
எனக் கோவை விமான நிலையம் முதல் ELCOT வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு!
4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது!
கோவை மக்களின் அன்பு!💗 என நெகிழவைக்கும் படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!