Tamilnadu
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் உள்ள தி.மு.க நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தீபாவளி பரிசு வழங்கினார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தினார். அப்போது, பூம்பூம் மாட்டு காரர்கள் சமூகத்தை சேர்ந்த 3 அடி மட்டுமே உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவனும், அவரது நண்பனும் சட்டமன்ற உறுப்பினருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது வசந்தம் கார்த்திகேயன் சிறுவர்களிடம், ’நீங்கள் எப்படி இங்கு வருகிறீர்கள்’ என்று கேட்டார். இதற்கு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒரு பழைய சிறிய சைக்கிளை காட்டி 'இதில் தான் நாங்கள் இருவரும் வருவோம்" என கூறியுள்ளார்.
பின்னர் உடனே, சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்தை அழைத்து ரூ. 25,000 வழங்கி இரண்டு சிறுவர்களையும் ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புதிய ஆடைகளை எடுத்து அவர்களுக்கு பிடித்த சைக்கிளை வாங்கி கொடுக்கும்படி கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சிறுவர்களை துணிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த புதிய துணி வாங்கி கொடுத்து, பிறகு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறிய புதிய சைக்கிள் ஒன்றும் வாங்கிக் கொடுக்கப்பட்டது. இதனால் நெகிழ்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி சிறுவன் வெற்றி, சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!