Tamilnadu
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்துகளில் இருக்கும் பயணிகளிடம் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ”சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 10 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். நேற்றைய தினம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயணம் செய்திருந்தார்கள். இன்றைய தினம் மாலை வரை 1 லட்சத்தை 33 ஆயிரத்து 925 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 738 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு லட்சத்து மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அனைத்து பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் இயக்குவது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அரசு கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. மக்கள் பிரச்சனை இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்து வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!