Tamilnadu
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
தமிழ்நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளை வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகிறார்கள்.
மேலும் வெளிமாவட்டங்களில் வேலைவார்க்கும் பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்லும வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் வாரச் சந்தையில் 2 மணி நேரத்தில் 44 ஆடுகள் விற்கனை செய்யப்பட்டுள்ளது.இந்த சந்தைக்கு தியாகதுருவம். திருக்கோவிலூர். ஆசனூர். மடப்பட்டு. சேந்தநாடு. குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது காலை ஐந்து மணிக்கு தொடங்கி இந்த சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த
வியாபாரிகள் வழக்கத்தைவிட ஆடுகளை வாங்கி குவித்தனர். வெள்ளாடு செம்மறி ஆடு குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 8000 முதல் ரூ. 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. வழக்கமாக இந்த வாரம் சந்தையில் ரூ.50 லட்சம் ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சந்தை தொடங்கி இரண்டு மணி நேரத்தில் 3 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Also Read
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் அரசு பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?
-
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு பெற்ற முதலீடு ரூ.6.70 லட்சம் கோடி! : ஒன்றிய அரசின் MSME EPC தகவல்!
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!