Tamilnadu
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
தமிழ்நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளை வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகிறார்கள்.
மேலும் வெளிமாவட்டங்களில் வேலைவார்க்கும் பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்லும வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் வாரச் சந்தையில் 2 மணி நேரத்தில் 44 ஆடுகள் விற்கனை செய்யப்பட்டுள்ளது.இந்த சந்தைக்கு தியாகதுருவம். திருக்கோவிலூர். ஆசனூர். மடப்பட்டு. சேந்தநாடு. குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது காலை ஐந்து மணிக்கு தொடங்கி இந்த சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த
வியாபாரிகள் வழக்கத்தைவிட ஆடுகளை வாங்கி குவித்தனர். வெள்ளாடு செம்மறி ஆடு குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 8000 முதல் ரூ. 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. வழக்கமாக இந்த வாரம் சந்தையில் ரூ.50 லட்சம் ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சந்தை தொடங்கி இரண்டு மணி நேரத்தில் 3 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!