Tamilnadu
ஒரே நாளில் 2.31 இலட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்! : தீபஒளித் திருநாள் எதிரொலி!
தீபஒளித் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு அறிவித்த தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பெருந்திரளான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பிலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளிலும் அரசு பேருந்து கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு தொடர்வண்டி, பேருந்து, வானூர்தி, தனி வாகனம் மூலம் பெரும் கூட்டமே, நீண்ட கால விடுமுறை நாட்களில் இளைப்பாற சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தகவலில், “தீபஒளித் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து நேற்று (அக்டோபர் 29) ஒரே நாளில் 2.31 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று (அக்டோபர் 30) நேற்றை விட கூடுதலான பயணிகள், சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!