Tamilnadu
ஒரே நாளில் 2.31 இலட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்! : தீபஒளித் திருநாள் எதிரொலி!
தீபஒளித் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு அறிவித்த தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பெருந்திரளான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பிலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளிலும் அரசு பேருந்து கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு தொடர்வண்டி, பேருந்து, வானூர்தி, தனி வாகனம் மூலம் பெரும் கூட்டமே, நீண்ட கால விடுமுறை நாட்களில் இளைப்பாற சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தகவலில், “தீபஒளித் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து நேற்று (அக்டோபர் 29) ஒரே நாளில் 2.31 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று (அக்டோபர் 30) நேற்றை விட கூடுதலான பயணிகள், சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !