Tamilnadu
ஒரே நாளில் 2.31 இலட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்! : தீபஒளித் திருநாள் எதிரொலி!
தீபஒளித் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு அறிவித்த தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பெருந்திரளான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பிலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளிலும் அரசு பேருந்து கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு தொடர்வண்டி, பேருந்து, வானூர்தி, தனி வாகனம் மூலம் பெரும் கூட்டமே, நீண்ட கால விடுமுறை நாட்களில் இளைப்பாற சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தகவலில், “தீபஒளித் திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து நேற்று (அக்டோபர் 29) ஒரே நாளில் 2.31 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று (அக்டோபர் 30) நேற்றை விட கூடுதலான பயணிகள், சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!