Tamilnadu
சென்னையின் 4 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது : தெற்கு ரயில்வே அறிவிப்பு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மேலும் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் ரயில்வே துறையும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளிக்காக ஊருக்கு செல்லும் பயணிகளுடன் வருவோரினால் ரயில்வே நிலைய நடைபாதைகளில் நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னையின் 4 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது கூறப்பட்டுள்ளது. அதே நேரம் மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
Also Read
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!