Tamilnadu
சென்னையின் 4 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது : தெற்கு ரயில்வே அறிவிப்பு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மேலும் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் ரயில்வே துறையும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளிக்காக ஊருக்கு செல்லும் பயணிகளுடன் வருவோரினால் ரயில்வே நிலைய நடைபாதைகளில் நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னையின் 4 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது கூறப்பட்டுள்ளது. அதே நேரம் மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு இது பொருந்தாது என்றும் கூறியுள்ளது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!