Tamilnadu
நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளிலும் மரப்பாதை! : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!
சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று களைப்பாற ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் மரப்பாதை அமைக்கப்பட்டது.
இதன் வழி, பெரும்பான்மையானோர் பயன்பெற்றதையடுத்து, மெரினாவை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனை நேரில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணி டிசம்பரில் முடிவுற்று, தமிழர் திருநாள் முதல் பயன்பாட்டிற்கு வரும்.
டிசம்பர் 3 இயக்கம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்கம் மெரினா, பெசன்ட் நகரை அடுத்து மற்ற நாகை உள்ளிட்ட முக்கிய கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையிலும் மரப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
அக்கோரிக்கையை ஏற்று, மற்ற கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளிலும் மரப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்” என தெரிவித்தார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !