Tamilnadu
நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளிலும் மரப்பாதை! : துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி!
சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று களைப்பாற ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் மரப்பாதை அமைக்கப்பட்டது.
இதன் வழி, பெரும்பான்மையானோர் பயன்பெற்றதையடுத்து, மெரினாவை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனை நேரில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணி டிசம்பரில் முடிவுற்று, தமிழர் திருநாள் முதல் பயன்பாட்டிற்கு வரும்.
டிசம்பர் 3 இயக்கம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்கம் மெரினா, பெசன்ட் நகரை அடுத்து மற்ற நாகை உள்ளிட்ட முக்கிய கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையிலும் மரப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
அக்கோரிக்கையை ஏற்று, மற்ற கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளிலும் மரப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்” என தெரிவித்தார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!