Tamilnadu
"சுதந்திர போராட்ட வீரர்களை தொடர்ந்து அவமதிக்கும் பா.ஜ.க" : அகிலேஷ் குற்றச்சாட்டு!
ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்தநாள் விழாவையொட்டி, லக்னோவில் உள்ள சர்வதேச மையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த மையத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி, தகர சீட்டுக்களால் மூடி மறைக்கப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அகிலேஷ் யாதவ் செல்வதை தடுக்கும் வகையில் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அகிலேஷ் யாதவ், கட்சியினர் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், ”சுதந்திர போராட்ட வீரர்களை பாரதிய ஜனதாக கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் தடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜ.க அவமதித்து வருவதால், அரசுக்கு அளிக்கும் ஆதரவை நிதிஷ்குமார் விலக்கி கொள்ள வேண்டும்” என குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!