Tamilnadu
சென்னை பட்டினப்பாக்கம் நவீன மீன் அங்காடி : விரைவில் செயல்படத் தொடங்கும்!
சென்னை பட்டினப்பாக்கம் மெரினா லூப் சாலையில் 9.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் 12ம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
366 கடைகள் கொண்ட மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக மீன் அங்காடி செயல்படுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான சாகசம் நிறைவடைந்த பின் திங்கள் முதல் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியில் கடைகள் மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லூப் சாலையோரங்களில் மீன் கடை மற்று. ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதியில்லை என்றும், மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!