Tamilnadu
5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிப்பு - யார் யாருக்கு விருது? எப்போது வழங்கப்படும்?
ஆண்டுதோறும் மதுவிலக்கு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்படும் 5 காவல்துறை பணியாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிக்கப்படும். காந்தி ஜெயந்தியை (அக்.2) முன்னிட்டு ஆண்டுதோறும் அக்.1-ம் தேதி அறிவிக்கப்படும் இந்த விருதானது, குடியரசுத் தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2024) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
“முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக,
பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம்,
கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்,
க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம்,
கா.சிவா, இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை, சேலம் மாவட்டம் மற்றும்
ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம்,
- ஆகியோருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்விருது, முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். மேலும் இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!