Tamilnadu
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது! : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாகவும், பாலின சமத்துவமிக்க கல்வி வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, முன்னோடி மாணவர்களாக பங்காற்றி வருகின்றனர். காரணம், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், அழுத்தமின்மையுமே.
அவ்வாறான அழுத்தமின்மை நடவடிக்கையாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி, “செப்.28 முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது.
பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்” என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
5 ஆண்டுகளில் மாபெரும் சாதனை.. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!
-
“பா.ஜ.க தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும்; அ.தி.மு.க?” : ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!
-
பாஜகவின் தொடர் அழுத்தம்.. முதலமைச்சராக பதவியேற்ற 4 மாதங்களில் ராஜினாமா.. நிதிஷின் முடிவால் பீகாரில் பரபர!