Tamilnadu
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது! : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாகவும், பாலின சமத்துவமிக்க கல்வி வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, முன்னோடி மாணவர்களாக பங்காற்றி வருகின்றனர். காரணம், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், அழுத்தமின்மையுமே.
அவ்வாறான அழுத்தமின்மை நடவடிக்கையாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி, “செப்.28 முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது.
பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்” என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!