Tamilnadu
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது! : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாகவும், பாலின சமத்துவமிக்க கல்வி வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, முன்னோடி மாணவர்களாக பங்காற்றி வருகின்றனர். காரணம், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், அழுத்தமின்மையுமே.
அவ்வாறான அழுத்தமின்மை நடவடிக்கையாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி, “செப்.28 முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது.
பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்” என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!