Tamilnadu
காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது! : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாகவும், பாலின சமத்துவமிக்க கல்வி வழங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி, முன்னோடி மாணவர்களாக பங்காற்றி வருகின்றனர். காரணம், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், அழுத்தமின்மையுமே.
அவ்வாறான அழுத்தமின்மை நடவடிக்கையாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி, “செப்.28 முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது.
பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்” என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!