Tamilnadu
தி.மு.க முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் மறைவு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி!
தி.மு.க முன்னாள் அமைச்சரும், கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார். சென்னை மீஞ்சூரில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த 76 வயதான க.சுந்தரம் உயிரிழந்தது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
1989 தி.மு.க ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996 - 2001 தி.மு.க ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், தி.மு.க.வில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு தி.மு.க அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், க.சுந்தரத்திற்கு ஆதிதிராவிட நலக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. கட்சியில் கடுமையாக உழைத்த சுந்தரத்தை பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு நடந்த தி.மு.க முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருதினை அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
இது குறித்து இரங்கல் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் க. சுந்தரம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!
-
நெல் கொள்முதல் விவகாரம்: அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் Data-வுடன் பதிலடி.. - விவரம் உள்ளே!
-
போலி விவசாயி... பொய் மூட்டை வியாபாரம்... - அவதூறு பரப்பிய பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி!
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!