Tamilnadu
விமானப்படை நிறுவன தினம் : அக்.7-ல் சென்னை மெரினா வான்வெளியில் அணிவகுக்கும் ரஃபேல், தேஜஸ் விமானங்கள் !
1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவின் முதல் விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் இவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படையின் நிறுவன தினமாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய விமானப்படையின் நிறுவன தினக் கொண்டாட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, 92 ஆவது ஆண்டு விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, அக்டோபர் 8 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தின்போது, இந்திய விமானப்படை அணிவகுப்பு, சென்னையில் காலை 7.45 மணியளவில் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் ஒரு பிரமாண்டமான விமானக் கண்காட்சி நடைபெறும் என்றும், இதில் இந்திய விமானப்படையை சேர்ந்த ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட முன்னணி போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதோடு ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்தவுள்ளது.சென்னையில் இந்த வரலாற்று நிகழ்வு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!