Tamilnadu
”தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான்” : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடுதான் சிறந்து விளங்குகிறது. 53% பேர் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ”இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக விளங்கி வருகிறது. 53% பேர் உயர்கல்விக்கு செல்கிறார்கள்.
இருமொழிக் கொள்கையால்தான் தமிழ்நாடு உலகளவில் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழி கொள்கைதான் கடைபிடிக்கப்படும்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கா நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற சிறப்பான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களால் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!