Tamilnadu
திருநெல்வேலியில் அமைய உள்ள தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையம்! : 32 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை!
திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரத்தில், தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையம் அமைய உள்ளதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் பாதுகாப்பிற்காக 32 பேர் அடங்கிய குழுவினர், அதிக நவீன உபகரணங்களுடன் ராதாபுரம் வந்தடைந்தனர்.
இந்நிலையில், தேசிய பேரிடர் குழுவின் மண்டல அலுவலகம், தற்காலிகமாக முறைப்படி இன்னும் இரண்டு நாட்களில் ராதாபுரத்தில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் பேரிடர் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மண்டல மையம் செயல்பட உள்ளது.
இந்தியாவில் 18 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் தேசிய பேரிடர் மையங்கள் இயங்கி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் ஏற்கனவே தேசிய பேரிடர் மண்டல மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் வழி, கேரளா ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் பேரிடர் சமயங்களில் அரக்கோணத்திலிருந்து மீட்புக் குழுவினர் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மண்டலத்தின் கீழ் கேரள மாநிலம் திருச்சூரிலும், அந்தமான் நிக்கோபார் தீவிலும், சென்னையிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் மண்டல மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக தற்பொழுது நான்காவது இடமாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு பிரிவு அமையப்பட உள்ளது. 32 பேர் கொண்ட இந்த தேசிய பேரிடர் குழு மண்டல மையம் 24 மணிநேரமும் செயல்படும்.
அதி நவீன மீட்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், இரசாயனம், கதிரியக்கம் மற்றும் உயிரியல் சார்ந்த பேரிடர்களை எதிர் கொள்ளும் வகையில் உபகரணங்களும் மண்டல மையத்தில் இடம்பெறுகிறது.
தற்காலிகமாக அமைய இருக்கும் மண்டலம், நிரந்தரமாக அமைவதற்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!