Tamilnadu
”திராவிட மாடல் அரசை பார்த்து அஞ்சும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
இந்தியாவிலேயே நமது திராவிட மாடல் அரசை பார்த்து ஒன்றிய அரசு அஞ்சுகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,”ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க ஒரு மாநில அரசை பார்த்து பயப்படுகிறது, அச்சப்படுகிறது என்றால் அது நமது திராவிட மாடல் அரசுதான்.
ஒன்றிய அரசின் மாதவாத அரசியலை துணிச்சலுடன் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து வருகிறார். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து வஞ்சித்து வருகிறது பா.ஜ.க அரசு.
தி.மு.க ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளில் புதிய பாலங்கள், புதிய சாலைகள், தடுப்பணைகள், ஏரி-கால்வாய் தூர் வாருவது அனைத்தும் செய்து முடித்துள்ளோம். காட்பாடி தொகுதியில் சிப்காட் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!