Tamilnadu
”திராவிட மாடல் அரசை பார்த்து அஞ்சும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
இந்தியாவிலேயே நமது திராவிட மாடல் அரசை பார்த்து ஒன்றிய அரசு அஞ்சுகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,”ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க ஒரு மாநில அரசை பார்த்து பயப்படுகிறது, அச்சப்படுகிறது என்றால் அது நமது திராவிட மாடல் அரசுதான்.
ஒன்றிய அரசின் மாதவாத அரசியலை துணிச்சலுடன் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து வருகிறார். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து வஞ்சித்து வருகிறது பா.ஜ.க அரசு.
தி.மு.க ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளில் புதிய பாலங்கள், புதிய சாலைகள், தடுப்பணைகள், ஏரி-கால்வாய் தூர் வாருவது அனைத்தும் செய்து முடித்துள்ளோம். காட்பாடி தொகுதியில் சிப்காட் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!