Tamilnadu
”திராவிட மாடல் அரசை பார்த்து அஞ்சும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
இந்தியாவிலேயே நமது திராவிட மாடல் அரசை பார்த்து ஒன்றிய அரசு அஞ்சுகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,”ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க ஒரு மாநில அரசை பார்த்து பயப்படுகிறது, அச்சப்படுகிறது என்றால் அது நமது திராவிட மாடல் அரசுதான்.
ஒன்றிய அரசின் மாதவாத அரசியலை துணிச்சலுடன் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து வருகிறார். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து வஞ்சித்து வருகிறது பா.ஜ.க அரசு.
தி.மு.க ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளில் புதிய பாலங்கள், புதிய சாலைகள், தடுப்பணைகள், ஏரி-கால்வாய் தூர் வாருவது அனைத்தும் செய்து முடித்துள்ளோம். காட்பாடி தொகுதியில் சிப்காட் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக.. தமிழ்நாடு ஹஜ் இல்லம் : நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன்: உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டு சென்னை இளைஞர் அசத்தல்!
-
உலகளவில் விளையாட்டுகளில் பதக்கங்கள்... அள்ளிக்குவித்த தமிழக வீராங்கனையருக்கு முதல்வர் ஊக்கத்தொகை!