Tamilnadu
”திராவிட மாடல் அரசை பார்த்து அஞ்சும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
இந்தியாவிலேயே நமது திராவிட மாடல் அரசை பார்த்து ஒன்றிய அரசு அஞ்சுகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,”ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க ஒரு மாநில அரசை பார்த்து பயப்படுகிறது, அச்சப்படுகிறது என்றால் அது நமது திராவிட மாடல் அரசுதான்.
ஒன்றிய அரசின் மாதவாத அரசியலை துணிச்சலுடன் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து வருகிறார். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து வஞ்சித்து வருகிறது பா.ஜ.க அரசு.
தி.மு.க ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகளில் புதிய பாலங்கள், புதிய சாலைகள், தடுப்பணைகள், ஏரி-கால்வாய் தூர் வாருவது அனைத்தும் செய்து முடித்துள்ளோம். காட்பாடி தொகுதியில் சிப்காட் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்!” : இலங்கை பிரதமரின் இந்திய வருகையையொட்டி முதல்வர் கடிதம்!
-
“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !