Tamilnadu
”திராவிட மாடல் திட்டத்தால் தாய்மார்களின் உள்ளம் கவர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் துரைமுருகன்
”இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் எம்.ஜி.ஆருக்கு பிறகு தாய்மார்களின் உள்ளம் கவர்ந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என அமைச்சர் துரைமுருகன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் நமது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமுன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி வாகையை நாம் சூடியுள்ளோம்.
இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நேர்ந்துள்ளது. அதனால்தான் நாம் இத்தகைய வெற்றியை பெற்று இருக்கிறோம்.
நமது திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து நல்லப் பலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் எம்.ஜி.ஆருக்கு பிறகு தாய்மார்களின் உள்ளம் கவர்ந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!