Tamilnadu
"கலைஞருக்கு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார் எ.வ.வேலு" : நூல் வெளியிட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி புகழாரம்
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைப்பெற்று வருகிறது. நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய அமைச்சர் உயநிதி ஸ்டாலின்,”எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் என்று தலைவர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் பாராட்டுகளை பெற்றவர் இந்த நூலின் மூலம் எழுத்திலும் வல்லவர் என்று நிரூபித்திருக்கிறார்.
திருவண்ணாமலையை தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக் காட்டியவர் அமைச்சர் எ.வ.வேலு. திராவிட மாடல் அரசின் பல்வேறு கட்டமைப்புகளை கட்டியெழுப்பியவர் இன்று சொற்களால் கலைஞருக்கு ஒரு கோட்டையை கட்டியிருக்கிறார்.
தலைவர் கலைஞர் பற்றி பல்வேறு நூல்கள் வந்துள்ளது. ஆனால் முதன்முதலாக தலைவர் கலைஞரை தாயோடு ஒப்பிட்டு, “கலைஞர் எனும் தாய்” நூலை எழுதியுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. பெண்கள் மட்டும் தாய் அல்ல; வீரமுள்ள ஆண் மகன்களும் தாய்மை அடைவது உண்டு என்ற கலைஞர் சொல்லியிருக்கிறார். அந்தவகையில் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை தாய் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!