Tamilnadu
கலைஞர் நாணயம் - காழ்ப்புணர்ச்சியில் பேசும் பழனிசாமி: அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ’கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்திற்கு அனுமதி ஆணை வழங்கும் விழா மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்த கொண்ட அமைச்சர் துரைமுருகன் 207 பேருக்கு வீட்டுமனை பட்டா ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, ”கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு வீடு கட்ட அரசு ரூ.3.5 லட்சம் ஒதுக்குகிறது. இந்நிலையில் சிலர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தகவல் வருகிறது.யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”நாணயம் வெளியிடுவது மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கலைஞர் நாணயத்தை எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்கிறார். இது தவறான செயலாகும்.” என பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!