Tamilnadu
கலைஞர் நாணயம் - காழ்ப்புணர்ச்சியில் பேசும் பழனிசாமி: அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ’கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்திற்கு அனுமதி ஆணை வழங்கும் விழா மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்த கொண்ட அமைச்சர் துரைமுருகன் 207 பேருக்கு வீட்டுமனை பட்டா ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, ”கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு வீடு கட்ட அரசு ரூ.3.5 லட்சம் ஒதுக்குகிறது. இந்நிலையில் சிலர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தகவல் வருகிறது.யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”நாணயம் வெளியிடுவது மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கலைஞர் நாணயத்தை எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்கிறார். இது தவறான செயலாகும்.” என பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!