Tamilnadu
இலங்கை கடற்படை தாக்குதல் : ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு!
தமிழ்நாடு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடி தொழிலையே, உயிருக்கு உத்தரவாதமற்ற தொழிலாக மாற்றியுள்ளது இலங்கை கடற்படை.
இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்க சென்றாலே, எல்லைத்தாண்டியதாக காரணம் காட்டி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம், தற்போது ஒரு படி மேல் சென்று தாக்குதலாக மாறியுள்ளது.
அவ்வகையில், நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இதில் மீனவர்கள் சென்ற மீன்பிடி படகுகள் கடலில் மூழ்கி, 4 பேர் மாயமாகினர். ராமேஸ்வரம் மீனவர் கார்த்திகேயன் உயிரிழந்துள்ளார்.
இதனை கண்டித்து, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை அருகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!