Tamilnadu
இலங்கை கடற்படை தாக்குதல் : ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு!
தமிழ்நாடு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடி தொழிலையே, உயிருக்கு உத்தரவாதமற்ற தொழிலாக மாற்றியுள்ளது இலங்கை கடற்படை.
இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்க சென்றாலே, எல்லைத்தாண்டியதாக காரணம் காட்டி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம், தற்போது ஒரு படி மேல் சென்று தாக்குதலாக மாறியுள்ளது.
அவ்வகையில், நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இதில் மீனவர்கள் சென்ற மீன்பிடி படகுகள் கடலில் மூழ்கி, 4 பேர் மாயமாகினர். ராமேஸ்வரம் மீனவர் கார்த்திகேயன் உயிரிழந்துள்ளார்.
இதனை கண்டித்து, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை அருகே பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!