Tamilnadu
”தமிழ்நாட்டை விட்டு எச்.ராஜாவை மக்கள் வெளியேற்றுவார்கள்” : செல்வப்பெருந்தகை பதிலடி!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக வஞ்சிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பிக்கள் ஒன்றிய பா.ஜ.க அரசை கடுமையாக கண்டித்துள்ளனர்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். அதேபோல் பொதுமக்களும் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என தனது வன்மத்தை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கக்கியுள்ளார். இதையடுத்து இவரது கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என கூறிய எச்.ராஜாவை தமிழக மக்களே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள். தேர்தல் மக்களை பார்த்து கையெழுத்து கும்பிட்டு விட்டு தற்போது இப்படி பேசுவது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம்.” என விமர்சித்துள்ளார்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!