Tamilnadu
”தமிழ்நாட்டை விட்டு எச்.ராஜாவை மக்கள் வெளியேற்றுவார்கள்” : செல்வப்பெருந்தகை பதிலடி!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக வஞ்சிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பிக்கள் ஒன்றிய பா.ஜ.க அரசை கடுமையாக கண்டித்துள்ளனர்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். அதேபோல் பொதுமக்களும் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என தனது வன்மத்தை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கக்கியுள்ளார். இதையடுத்து இவரது கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என கூறிய எச்.ராஜாவை தமிழக மக்களே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள். தேர்தல் மக்களை பார்த்து கையெழுத்து கும்பிட்டு விட்டு தற்போது இப்படி பேசுவது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம்.” என விமர்சித்துள்ளார்.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!