Tamilnadu
”தமிழ்நாட்டை விட்டு எச்.ராஜாவை மக்கள் வெளியேற்றுவார்கள்” : செல்வப்பெருந்தகை பதிலடி!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக வஞ்சிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பிக்கள் ஒன்றிய பா.ஜ.க அரசை கடுமையாக கண்டித்துள்ளனர்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். அதேபோல் பொதுமக்களும் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என தனது வன்மத்தை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கக்கியுள்ளார். இதையடுத்து இவரது கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காதது சரியே என கூறிய எச்.ராஜாவை தமிழக மக்களே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள். தேர்தல் மக்களை பார்த்து கையெழுத்து கும்பிட்டு விட்டு தற்போது இப்படி பேசுவது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம்.” என விமர்சித்துள்ளார்.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!