Tamilnadu
”Kalaignar Sports Kit திட்டம் திறமையாளர்களை சாதனையாளர்களாக மாற்றும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின் போது திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த 726 கிராம ஊராட்சிகளுக்கு 1048 எண்ணிக்கையிலான Kalaignar Sports Kit-ஐ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிராமப்புற பகுதிகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு அதிக வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்த ஊராட்சிகளுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
33 வகையான விளையாட்டுகளுக்கான உபகரணங்களைக் கொண்ட Kalaignar Sports Kit திட்டம், கிராமப்புறத்தில் உள்ள விளையாட்டுத் துறை திறமையாளர்களை சாதனையாளர்களாக மாற்றும். தமிழ்நாட்டில் இருந்து 16 பேர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு சாதித்து வருகிறது
தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன்பெரும் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!