Tamilnadu
ரூ. 67.41 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 2 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.67.41 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், விஜயபுரம், அருள்மிகு ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலுடன் இணைந்த குழுக்கோயிலான அருள்மிகு ஐநூற்று பிள்ளையார் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 14.11 கோடி மதிப்பிலான 35,276 சதுரடி மனை ஆக்கிரமிப்பிலிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், மற்றொரு குழுக்கோயிலான அருள்மிகு கபிலேஷ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.53.30 கோடி மதிப்பிலான 1,33,252 சதுரடி நஞ்சை நிலம் இரண்டு நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், நீர்பாசன வசதியில்லாத காரணத்தினால் சாகுபடி செய்யப்படாமல் தரிசாக இருந்தது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.67.41 கோடியாகும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!