Tamilnadu
மேற்கு வங்கம் To சென்னை... கைப்பையில் இருந்த கஞ்சா... சோதனையில் சிக்கிய பெண்... - நடந்தது என்ன?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு இரும்பு பாதை போலீசார் வழக்கம்போல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நடைமேடை 5-ல் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் விரைவு வண்டியில் மங்களூரில் இருந்து வரக்கூடிய மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் அவரை அழைத்த போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. இதையடுத்து அவரது கையில் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை எடைபோட்டு பார்த்தபோது, அது 5 கிலோ என்று கண்டறியப்பட்டது. பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பெண் மேற்கு மாநிலம் பரத மான் பகுதியைச் சேர்ந்த தரிகா பேகம் (31) என்பது தெரியவந்தது. தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
-
சென்னையில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : 2 அமைச்சர்கள் ஆய்வு!
-
“பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை” : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய்யை பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்க : வைகோ வலியுறுத்தல்!