Tamilnadu
மேற்கு வங்கம் To சென்னை... கைப்பையில் இருந்த கஞ்சா... சோதனையில் சிக்கிய பெண்... - நடந்தது என்ன?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு இரும்பு பாதை போலீசார் வழக்கம்போல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நடைமேடை 5-ல் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் விரைவு வண்டியில் மங்களூரில் இருந்து வரக்கூடிய மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் அவரை அழைத்த போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. இதையடுத்து அவரது கையில் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை எடைபோட்டு பார்த்தபோது, அது 5 கிலோ என்று கண்டறியப்பட்டது. பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பெண் மேற்கு மாநிலம் பரத மான் பகுதியைச் சேர்ந்த தரிகா பேகம் (31) என்பது தெரியவந்தது. தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!