Tamilnadu
உயிரை கொடுத்து 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் - ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் வழக்கம்போல் நேற்றைய முன்தினம் (ஜூலை 24) மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேனில் சென்றார்.
அப்போது வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது சேமலையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சுதாரித்த அவர், வேனில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகிவிட கூடாது என்று எண்ணி, தன் உயிரை கையில் பிடித்தபடியே வேனை ஓட்டிச்சென்று சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, ஸ்டிரியங்கில் தனது தலையை வைத்தபடியே உயிரிழந்தார். ஓட்டுநர் சேமலையப்பனின் இந்த துரித செயலால் 20 குழந்தைகள் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஓட்டுநர் சேமலையப்பனின் செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதியான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சேமலையப்பன் குடும்பத்தினரிடம் வழங்கினார். உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பனுக்கு லலிதா என்ற மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு சேமலையப்பன் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்தும் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கேயத்தில் அமைந்துள்ள சேமலையப்பன் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தோம். தன்னுடல் இழந்தாலும் மனிதநேயமிக்க மனிதர்களின் மனங்களில் உயிர் பெற்றுள்ளார் சேமலையப்பன் அவர்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!