Tamilnadu
கொழுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து : உயிர் தப்பிய 30 பேர் - நடந்தது என்ன?
திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து இன்று அதிகாலை கோவை அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் இருந்து திடீரென புகை வருவதை பார்த்த ஓட்டுநர் உடனே சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடத்திலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் இது குறித்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.
இது குறித்து பீளமேடு காவல் துறையினர் டீசல் கசிவு அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!