Tamilnadu
குளிக்கச் சென்ற நண்பர்கள் : 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த துயரம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தமிழ்ச்செல்வன். சிறுவன் அருகே உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்த வேப்பமரத்து சாலை பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.
அப்போது தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தமிழ்செல்வனை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பருடன் குளிக்கச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!