Tamilnadu
”உயர் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு” : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!
விழுப்புரம் மாவட்டம் வானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11 கோடியே 33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய கட்டடத்தை திறந்து வைத்து விழா சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் ”மாணவர்கள் படிக்கும்போதே வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் பேச்சாற்றலையும் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ”நான் முதல்வன்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.இந்த திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்று பொது அறிவையும், கல்வித்தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 52% மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டுமல்லாமல் கல்வி தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் நமது அரசும், முதலமைச்சரும் செயல்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!