Tamilnadu
ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் : எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கைது !
கரூரில் பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை தனது மகள் சோபனா என்பவருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்திருந்தார். இந்த சூழலில் இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர் சகோதரர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்துவிட்டதாக பிரகாஷ் புகார் அளித்திருந்தார் .
அந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவும் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சுமார் 40 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரள மாநிலம் திருச்ச்சூரில் வைத்து நேற்று (ஜூலை 16) சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் கரூருக்கு அழைத்து வரப்பட்ட விஜயபாஸ்கரிடம் சுமார் 6 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலலுக்கு அனுப்பி வைத்தனர்.
பிரகாஷ் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை தனது மகள் சோபனாவின் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்தாலும், அந்த பத்திரங்களை பிரகாஷ் மறைத்து வைத்திருந்தார். ஆனால், சோபனா பெயரில் இருந்து பத்திரங்கள் காணாமல் போய்விட்டதாக வில்லிவாக்கம் காவல்நிலயத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டு அதன் பெயரில் காணாமல் போன பத்திரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சான்றிதழ் அளித்திருந்த்தாக கூறப்படுகிறது.
அந்த சான்றிதழ் அடிப்படையில் ஷோபனாவிடம் பெயரில் இருந்து 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திர பதிவு செய்து கொண்டனர். இந்த சூழலில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அளித்த சான்றிதழ் போலியானது என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜை கைது செய்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பல்கலை. வேந்தர் நியமனம், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்: செல்வப்பெருந்தகை காட்டம்!
-
2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!