Tamilnadu
மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் : பா.ஜ.க நிர்வாகி கைது - நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேலோட்டஸ் பவுண்டேஷன் குடி போதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் பா.ஜ.க முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் காமராஜ்.
இந்நிலையில் இந்த மையத்தில், கடந்த 5 ஆம் தேதி அன்று சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடிபயக்கத்திற்கு அடிமையானதால், அவரது குடும்பத்தினர் லோட்டஸ் பவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த அறிக்கையில், ராஜசேகர் உடலில் சில காயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை அடித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலிஸார் வழக்கு பதிவு செய்து மறுவாழ்வு மையத்தில் நிறுவனர் காமராஜ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மறுவாழ்வு மையத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!