Tamilnadu
மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் : பா.ஜ.க நிர்வாகி கைது - நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேலோட்டஸ் பவுண்டேஷன் குடி போதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் பா.ஜ.க முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் காமராஜ்.
இந்நிலையில் இந்த மையத்தில், கடந்த 5 ஆம் தேதி அன்று சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடிபயக்கத்திற்கு அடிமையானதால், அவரது குடும்பத்தினர் லோட்டஸ் பவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த அறிக்கையில், ராஜசேகர் உடலில் சில காயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை அடித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலிஸார் வழக்கு பதிவு செய்து மறுவாழ்வு மையத்தில் நிறுவனர் காமராஜ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மறுவாழ்வு மையத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!