Tamilnadu
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த காரணம் இதுதான் : முத்தரசன் விளக்கம்!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் நேமூர் கூட்டு சாலையில் அன்னியூர் சிவாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார். மேலும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மூர்த்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோரும் உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது பேசிய முத்தரசன், ” மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என கல்விக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
நாங்கள் பிரதான கட்சி என்று சொல்லும் அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?. பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையே இருக்கும் கள்ளக் கூட்டணியால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாமல் விலகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் ஆசீர்வாதத்தோடு ஒரு கட்சி நிற்கிறது. பா.ம.கவும், பா.ஜ.கவும் சந்தர்ப்பவாத கூட்டணி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"தியாகத்தின் அடையாளமாய்... கொள்கையில் இமயமாய்..." விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு! - முரசொலி!
-
உயிர்நீத்த 22 தியாகிகளுக்கு நினைவுத் தூண் : தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் சிலை!
-
இதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
-
பயணிகளுக்காக... 100 புதிய குளு குளு மின்சார AC BUS.. அதிநவீன சொகுசு BUS.. தொடங்கி வைத்தார் துணை முதல்வர்!
-
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி... 3 மாவட்டங்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள்!