Tamilnadu
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த காரணம் இதுதான் : முத்தரசன் விளக்கம்!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் நேமூர் கூட்டு சாலையில் அன்னியூர் சிவாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார். மேலும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மூர்த்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோரும் உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது பேசிய முத்தரசன், ” மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என கல்விக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
நாங்கள் பிரதான கட்சி என்று சொல்லும் அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?. பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையே இருக்கும் கள்ளக் கூட்டணியால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாமல் விலகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் ஆசீர்வாதத்தோடு ஒரு கட்சி நிற்கிறது. பா.ம.கவும், பா.ஜ.கவும் சந்தர்ப்பவாத கூட்டணி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?