Tamilnadu
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த காரணம் இதுதான் : முத்தரசன் விளக்கம்!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் நேமூர் கூட்டு சாலையில் அன்னியூர் சிவாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார். மேலும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மூர்த்தி, செஞ்சி மஸ்தான் ஆகியோரும் உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது பேசிய முத்தரசன், ” மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என கல்விக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
நாங்கள் பிரதான கட்சி என்று சொல்லும் அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?. பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையே இருக்கும் கள்ளக் கூட்டணியால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாமல் விலகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் ஆசீர்வாதத்தோடு ஒரு கட்சி நிற்கிறது. பா.ம.கவும், பா.ஜ.கவும் சந்தர்ப்பவாத கூட்டணி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!